குருதி நிலம்


மீண்டும் தலைத்தூக்குகிறது ஹிந்து பாசிசத்தின் கொலைவெறியட்டம்
July 25, 2008, 5:15 pm
Filed under: Uncategorized

மீண்டும் தலைத்தூக்குகிறது ஹிந்து பாசிசத்தின் கொலைவெறியட்டம்.

இன்று பெஙகளூரில் 7 இடங்களில் குண்டு வெடிப்பு…. 

இத‌ற்கு கார‌ண‌மாக வழக்கம் போல் பார்ப்பன பயங்கரவாதிகளும்,ஆளும் வர்க்கமும் கூச்சலிடுவது அல் கொய்தா ம‌ற்றும் ல‌ஸ்க‌ர் இ தொய்பா போன்ற‌ இஸுலாமிய அமைப்புக‌ள் என்று தான்.
ஆனால் க‌ட‌ந்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளை பார்க்கும் போது இந்த‌‌ ச‌திச்செய‌லை செய்ய‌ துணிச்ச‌ல் கொண்டவர்கள் R..S.S பா.ஜ.க,பஜ்ரங்தள் குண்டர்கள் என்ப‌த‌ற்கு ப‌ல‌ நிக‌ழ்வுக‌ளை நாம் எடுத்துக்கொள்ள‌லாம்.

இவ‌ர்க‌ள் அரிய‌ணை ஏறி ஒரு சில‌ மாத‌ங்க‌ளிலேயே தொடர் குண்டு வெடிப்புக‌ள் நிகழ்ந்திராத‌ பெங்க‌ளூரில் தொட‌ர்ச்சியாக‌ ஏழு இட‌ங்க‌ளில் குண்டு வெடிப்புக‌ள்.

இதை செய்திருப்ப‌து இவ‌ர்க‌ள் இல்லை என்றாலும் இத‌ற்கான‌ தீர்ப்புக‌ள் எவ்வாறு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் என்பதையும் நாம் கூற முடியும்.
இந்த‌ பயங்கரச்செயலை{குண்டு வெடிப்பு} இவ‌ர்க‌ள் தான் செய்தார்க‌ள் என்று நாம் கூறுவ‌தை போல‌ அன்த‌ வ‌ழ‌க்கின் தீர்ப்பையும் கூறிவிட‌ முடியும்!

இத‌ற்கான‌ பல உதார‌ண‌ங்கள் தான் தென்காசி குண்டு வெடிப்பு மற்றும் இன்னும் தீர்ப்பு வெளிவர விடாமல் திட்டமிட்டு மறைத்துக்கொண்டிருக்கும் கோவை குண்டு வெடிப்பு ச‌ம்ப‌வ‌ம்.

அப்ப‌டிய‌ல்லாமல் R.S.S பா.ஜ.க,பஜ்ரங்தள் குண்ட‌ர்க‌ள் தான் என்றால் நரமாமிச வெறியன் மோடி நடத்திய குஜராத் இனப்படுகொலையின் தீர்ப்பைப்போலத்தான் இத‌ற்கான‌ தீர்ப்பும் வெளியாகும் என்ப‌தை இப்பொழுதே உறுதியாக‌ கூற‌முடியும்.

இது எப்படி இருந்தாலும் எதிர் க‌ட்சிக‌ளும்,மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரசும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? இவர்களும்,ம‌க்க‌ளுக்கான‌ க‌ட்சிக‌ள் என்று கூறிக்கொண்டிருக்கும் அனைத்து யோக்கிய‌ர்க‌ளும் கொலைகார‌ர்க‌ள் தான் என்ப‌தை அவ‌ர்கள் அரங்கேற்றிய ‌கடந்த‌ கால‌ கொலை வெறியாட்ட‌ங்க‌ளிலிருந்து புரிந்துகொள்ள‌லாம்.

இத‌ற்கான‌ இர‌த்த‌ சாட்சிய‌ங்க‌ள் தான் இன்னும் ஈர‌ம் காயாமல் ந‌ம் க‌ண் முன்னே நின்று கொண்டிருக்கும் ப‌ஞ்சாப் சீக்கிய‌ப்ப‌டுகொலை,ஈழ‌ப்ப‌டுகொலை,வெண்மணி வெறியாட்டம்,ந‌ன்திகிராம் ப‌டுகொலைக‌ள்,இன்றும் க‌ண்னெதிரிலேயே குத்திக்குத‌ற‌ப்ப‌டும் ம‌ணிப்பூர் ம‌ண்ணில் ந‌ட‌க்கும் ப‌டுகொலைகள் அனைத்தும்.
இது போன்று இன்னும் ஏராள‌மான‌ ப‌டுகொலைக‌ளை கூறிக்கொண்டே போகலாம்.

இதையெல்லாம் பார்க்கும் போது தெரிவது என்னவென்றால் இந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் நடக்கும் பொழுது ஒருவன் ஆளும் கட்சியாகவும் மற்றவன் எதிர்க்கட்சியாகவுமே இருந்துள்ளான்.அனால் ஒரு நாயும் இதற்காக பிடிபட்டு தண்டிக்கப்படவில்லை ஏனென்றால் அவர்கள் தண்டிக்கப்படாமலிருப்பதற்கான காரணம் முந்தைய ஆட்சியில் இவர்கள் தண்டிக்கப்படாமலிருந்ததே.

இதையெல்லாம் பார்த்தும் இது போலி ஜ‌ன‌னாய‌க‌ம் என்று தெரியாம‌ல்
இந்தியா ஒரு வல்லரசு,ஜனநாயக நாடு என்று கூறிக்கொண்டிருப்பது ஆயுதத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு எங்களை கொல்லுங்கள் என்று சொல்வதைப்போன்று தான் இருக்கிறது.

இவ்வாறு நாம் ஆட்டுமந்தைக‌ளை போல‌ ந‌டந்து கொண்ட‌த‌ன் விளைவு தான் இன்றைய விலைவாசி உயர்வும் அதன் உச்சக்கட்டமான அணுச‌க்தி ஒப்பந்த‌‌மும்.  

இனிமேலும் நாம் பொருத்துக்ககொண்டிருப்ப‌தில் அர்த்த்மே இல்லை.

ம‌க்க‌ளாகிய‌ நாம் போராடுவ‌து ஒன்றுதான் ஒரே வ‌ழி.
உழைக்கும் ம‌க்க‌ளாகிய‌ நாம் ஒன்று சேர்வோம்.

தேர்த‌ல் பாதை திருட‌ர் பாதை ம‌க்க‌ள் பாதையே புர‌ட்சிப்பாதை என்ற் முழ‌க்க‌ங்க‌ளுட‌ன் பார்ப்பனிய பாசிச பயங்கர‌வாத‌த்தையும் ம‌றுகால‌ணியாதிக்க‌த்தையும் வேரோடு வெட்டிச்சாய்த்து இம்ம‌ண்ணில் புதிய‌ ஜ‌ன‌னாய‌க‌ புர‌ட்சியை சாதிப்போம்.


5 Comments so far
Leave a comment

வணக்கம் தோழர்

Comment by sukran

மிகவும் அருமையான கட்டுரையினைப் படைத்த தோழருக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்!

தோழமையுடன்,
கதிர்.

Comment by கதிர்

vanakkam thozar 🙂

Comment by renugaajitha

தோழர்களுக்கு,

நவம்பர் புரட்சி தினத்திற்கு புரட்சிகர வாழ்த்துகள்.

Comment by சர்வதேசியவாதிகள்

வாழ்த்துகள் தோழர்.

Comment by குருதி நிலம்




Leave a reply to சர்வதேசியவாதிகள் Cancel reply